நல்ல செய்தி ! நம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமாக பிளாஸ்டிக் ஒழிக்க பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்று முதல் அதை அமல் படுத்தி, இது வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. பிளாஸ்டிக் புழக்கத்தை கண்காணிக்க ஒரு குழு இருபத்தி நன்கு மணி நேரமும் செயல் பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்போருக்கு அந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்க படுகிறது. அந்த பைகளில் அச்சிடப்பட்டிருக்கும் வர்த்தக நிறுவனமும் தப்ப முடியாது, அவர்களுக்கு அபராத தொகை அதிகம் !
பொது மக்களுக்கு இது சற்றே தலை வலி என்றாலும், மக்கள் பிளாஸ்டிக் இல்லா நடை முறை வாழ்கைக்கு பழகி விட்டனர். எல்லா கடைகளிலும் இப்போது பேப்பர் அல்லது இலைகளே பேக் செய்ய பயன் படுத்துகின்றனர். குப்பை தொட்டிகளில் கூட பிளாஸ்டிக் பைகளை அவ்வளவாக காண முடிவதில்லை.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பாராட்டுக்கு உரியதே ! பெயர் அளவுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு என்று சொல்லி நின்று விடாமல், மக்களை பிளாஸ்டிக் புழக்கம் இல்லா வாழ்க்கைமுறைக்கு மெதுவாக கொண்டு செல்லும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! வெற்றி பெற வேண்டும்.
பல விஷயங்களில் முன்னோடி மாவட்டமாக விளங்கும் கன்னியாகுமரி, பிளாஸ்டிக் ஒழிப்பிலும் முன்னோடியாக விளங்கும் !
அன்புடன்,
பெருமாள்
Tuesday, April 27, 2010
Wednesday, April 14, 2010
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
யாரு என்ன சொன்னாலும் சரி.. எங்களுக்கு தமிழ் புத்தாண்டு இன்னிக்கு தான் !
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த வருடம் அமைதி, அன்பு மற்றும் வெற்றிகளை அனைவருக்கும் வாரி வழங்கட்டும் !
அன்புடன்,
பெருமாள்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த வருடம் அமைதி, அன்பு மற்றும் வெற்றிகளை அனைவருக்கும் வாரி வழங்கட்டும் !
அன்புடன்,
பெருமாள்.
Thursday, April 8, 2010
அரசியல் பகடைகள் - அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்
ஏதோ பொறி வைத்து ஒரு எலி கூட்டத்தை வேட்டையாடியது போல, நூறு படை வீரர்களை சில நொடிகளில் கொன்று சென்று விட்டனர் நக்சல் கூட்டம். இந்திய மண்ணிலேயே பிறந்து, இந்திய படை வீரனையே கொன்று இன்பம் காணும் இந்த காட்டு மிராண்டிகளை என்னவென்று சொல்வது? ஆமா, சானியா வே பாகிஸ்தான் காரனுக்கு இரண்டாவது பொண்டாட்டியாக போக தயார், பின்ன இந்த படிப்பறிவு இல்லாத நக்சல் கூட்டத்தை குற்றம் சொல்லி என்ன பயன்?
இவ்வளவு நடந்த பின்பும், இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவிப்பு விடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் என்ன அற வழி போராட்டமா நடத்துகிறார்கள். நடந்தது உயிர் கொலை ! இவர்களுடன் பேச ஒன்றுமே இல்லை, கூண்டோடு சுட்டு தள்ளுவதை தவிர. இன்னும் இவர்களுக்கு பரிந்து பேசும் அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள் , பத்திரிகை என ஒரு ஜால்ரா கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு இந்த என்பது வீரர்களின் இழப்போ, இறந்த வீரர்களின் குடும்பமோ கண்ணனுக்கு தெரியாது... எல்லாம் சாதி ஓட்டுக்கள் மட்டுமே. இவர்களின் அசிங்கம் பிடித்த அரசியலில் பகடை காய்கள் இந்த அப்பாவி வீரர்கள்.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி. என்றோ ஒருநாள் இந்த மரணங்களுக்கு இந்த அரசும், அமைச்சர்களும், நிர்வாகமும் பதில் சொல்லியே தீர வேண்டும். தீவிரவாதம் , நக்சலிசம் இவற்றை பிஜேபி அரசு மிகவும் சிறப்பாக அடக்கி ஆண்டது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை ! அந்த விஷயத்தில் இந்த அரசு ஒரு சொரணை இல்லாமலே இருக்கிறது. விஷயத்தின் தீவிரத்தை அவர்கள் உணர இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் மடிய வேண்டுமோ தெரிய வில்லை :-(
வருத்ததுடன்,
பெருமாள்.
இவ்வளவு நடந்த பின்பும், இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவிப்பு விடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் என்ன அற வழி போராட்டமா நடத்துகிறார்கள். நடந்தது உயிர் கொலை ! இவர்களுடன் பேச ஒன்றுமே இல்லை, கூண்டோடு சுட்டு தள்ளுவதை தவிர. இன்னும் இவர்களுக்கு பரிந்து பேசும் அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள் , பத்திரிகை என ஒரு ஜால்ரா கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு இந்த என்பது வீரர்களின் இழப்போ, இறந்த வீரர்களின் குடும்பமோ கண்ணனுக்கு தெரியாது... எல்லாம் சாதி ஓட்டுக்கள் மட்டுமே. இவர்களின் அசிங்கம் பிடித்த அரசியலில் பகடை காய்கள் இந்த அப்பாவி வீரர்கள்.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி. என்றோ ஒருநாள் இந்த மரணங்களுக்கு இந்த அரசும், அமைச்சர்களும், நிர்வாகமும் பதில் சொல்லியே தீர வேண்டும். தீவிரவாதம் , நக்சலிசம் இவற்றை பிஜேபி அரசு மிகவும் சிறப்பாக அடக்கி ஆண்டது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை ! அந்த விஷயத்தில் இந்த அரசு ஒரு சொரணை இல்லாமலே இருக்கிறது. விஷயத்தின் தீவிரத்தை அவர்கள் உணர இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் மடிய வேண்டுமோ தெரிய வில்லை :-(
வருத்ததுடன்,
பெருமாள்.
Subscribe to:
Posts (Atom)