பாடல்:
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் காரக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, மன்னர் சேனை மானுமே.
பொருள்:
அயோத்தி மாநகர கோட்டை அகழியில் நீந்தும் அன்ன பறவைகள் (அரசனுடைய) வெண்கொற்றக் குடைகளாகவும்; முதலைகள் கிரகங்களெல்லாம் சுற்றிவரும் பெரிய மலைகளை போன்ற யானைப் படைகளாகவும்; வீசும் அலைகளில் அலைவுறும் தண்டுகளை கொண்ட தாமரை மலர்களே குதிரைப் படைகளாகவும்; அங்கு நீந்தித் திரிகின்ற மீன்களே வாளாகவும், வேலாகவும் தோற்றமளித்து, அந்த அகழியே மன்னனுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படையாகத் திகழ்ந்தது.
மீன்களை வேலுக்கும் வாளுக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கும் கம்பன் வித்தன் தானே !!!
அன்புடன்,
பெருமாள்.
Sunday, June 27, 2010
Sunday, June 20, 2010
ராவணன் - எனக்கு புரிந்தது
ரொம்ப நாளைக்கு பிறகு , நண்பனின் அன்பு தொல்லையால் ராவணன் படம் பார்க்க ஒத்து கொண்டேன். படம் பார்க்கும் முன்பு எனக்கு படத்தை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அது ஒரு வகையில் நல்லதே, இல்லை எனில் படம் பார்த்த பின் ஏமாற்றத்தின் அளவு இரு மடங்காக இருந்திருக்கும்.
படத்தில் திரை கதை என்று ஒன்று இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. போலீஸ் கற்பழித்து விடும் ஹீரோ (ராவணன்!!!) தங்கை... வழக்கம் போல் அண்ணனிடம் பொலம்பி விட்டு, தற்கொலை செய்து கொள்கிறாள். உடனே "வீரா"வேஷம் போட்டு பழிவாங்க புறப்படும் அண்ணன். பழிவாங்க போலீஸ் அதிகாரி உடைய பொண்டாடியை கடத்தி கொண்டு வந்து காதலிக்கிறார் ஹீரோ !!! ( என்னங்கட சாமி லாஜிக் இது !!!)
வழக்கம் போல போலீஸ் அதிகாரி பொண்டாடியை தேடி வர, நம்ம ஹீரோவை நல்லவராக காட்டுவதற்கு சில காட்சிகள். அப்புறம் ஏதோ சில பல டயலாக் பேசி ஹீரோ சென்று விட, அதிகாரி பொண்டாடியை கூடி கொண்டு "வீரா " வை பிடிக்க முடியாத வருத்ததுடன் செல்கிறார். அப்புறம் பயங்கரமா யோசிச்சு பொண்டாட்டிய கடுப்பேத்தி "வீரா" இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்து, அவரும் ஒரு பெரிய படையுடன் பின்னாடி வர, நம்ம "வீரா" அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு வெளிய வந்து அதிகாரி கிட்ட சிக்கி செத்துபோரன். இவ்ளோ தான் கதை.
படத்தில் திரை கதை என்று ஒன்று இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. போலீஸ் கற்பழித்து விடும் ஹீரோ (ராவணன்!!!) தங்கை... வழக்கம் போல் அண்ணனிடம் பொலம்பி விட்டு, தற்கொலை செய்து கொள்கிறாள். உடனே "வீரா"வேஷம் போட்டு பழிவாங்க புறப்படும் அண்ணன். பழிவாங்க போலீஸ் அதிகாரி உடைய பொண்டாடியை கடத்தி கொண்டு வந்து காதலிக்கிறார் ஹீரோ !!! ( என்னங்கட சாமி லாஜிக் இது !!!)
வழக்கம் போல போலீஸ் அதிகாரி பொண்டாடியை தேடி வர, நம்ம ஹீரோவை நல்லவராக காட்டுவதற்கு சில காட்சிகள். அப்புறம் ஏதோ சில பல டயலாக் பேசி ஹீரோ சென்று விட, அதிகாரி பொண்டாடியை கூடி கொண்டு "வீரா " வை பிடிக்க முடியாத வருத்ததுடன் செல்கிறார். அப்புறம் பயங்கரமா யோசிச்சு பொண்டாட்டிய கடுப்பேத்தி "வீரா" இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்து, அவரும் ஒரு பெரிய படையுடன் பின்னாடி வர, நம்ம "வீரா" அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு வெளிய வந்து அதிகாரி கிட்ட சிக்கி செத்துபோரன். இவ்ளோ தான் கதை.
எனக்கு இந்த படத்துல இருந்து புரிஞ்சது ரெண்டு விஷயம்,
- அடுத்தவன் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண, அந்த பொண்ண கடத்திட்டு வந்து ஒரு பத்து நாள் நல்ல சந்தோசமா வச்சுருந்தா போதும.
- ஆனா அப்டியே கரெக்ட் பண்ணினாலும், "மாற்றான் மனைவி மேல் ஆசை" பட்ட பாவத்துக்கு, அவளோட புருஷன் கையாலேயே செத்து போகணும்.
எனக்கு ரெண்டு விஷயமுமே பிடிச்சுருக்கு ! உங்களுக்கு???
அன்புடன்,
பெருமாள்
Wednesday, June 2, 2010
கம்பன் ஒரு வித்தன் - பாகம் 2
இன்று என்னை கவர்ந்த பாடல் :-
பாடல்:
கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
மதுவளம் மலரில்கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்.
பொருள்:-
நல்ல வயலில் கதிர்விட்டு நிற்கும் இருக்கும் தானியங்களையும்; நறுமணம்
கொண்ட பொய்கைகளில் பூத்து நிற்கும் மலர்களையும்; மரங்களிலேயே முதிர்ந்து நிற்கும் பழங்களையும்; புன்செய் நிலத்தில் விளையும் பயறு வகைகளையும்; வீட்டில் கொல்லையில் உள்ள கொடிகளில் காய்த்த
காய்களையும்; நிலத்தில் குழிகளில் விளையும் கிழங்குகளையும், ஒவ்வொரு மலராகச் சென்று எடுத்துக் கொள்ளும் தேனீக்களைப் போல, மள்ளர்கள் ஆங்காங்கே சென்று சேகரித்து வருவர்
என்ன ஒரு அழகான விஷயங்கள். இவற்றை படிக்கும் பொழுதே , அவை ஒவ்வொன்றும் நம் கண் முன்னே வருகின்றன. இதை தவிர வேறென்ன வெற்றி ஒரு சிறந்த கவிதைக்கு இருக்க முடியும்.
அன்புடன்,
பெருமாள்.
பாடல்:
கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
மதுவளம் மலரில்கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்.
பொருள்:-
நல்ல வயலில் கதிர்விட்டு நிற்கும் இருக்கும் தானியங்களையும்; நறுமணம்
கொண்ட பொய்கைகளில் பூத்து நிற்கும் மலர்களையும்; மரங்களிலேயே முதிர்ந்து நிற்கும் பழங்களையும்; புன்செய் நிலத்தில் விளையும் பயறு வகைகளையும்; வீட்டில் கொல்லையில் உள்ள கொடிகளில் காய்த்த
காய்களையும்; நிலத்தில் குழிகளில் விளையும் கிழங்குகளையும், ஒவ்வொரு மலராகச் சென்று எடுத்துக் கொள்ளும் தேனீக்களைப் போல, மள்ளர்கள் ஆங்காங்கே சென்று சேகரித்து வருவர்
என்ன ஒரு அழகான விஷயங்கள். இவற்றை படிக்கும் பொழுதே , அவை ஒவ்வொன்றும் நம் கண் முன்னே வருகின்றன. இதை தவிர வேறென்ன வெற்றி ஒரு சிறந்த கவிதைக்கு இருக்க முடியும்.
அன்புடன்,
பெருமாள்.
Tuesday, June 1, 2010
கலர் கண்ணாடி !
சிறு வயதில் திருவிழா காலங்களில் பல வண்ணங்களில் கண்ணாடிகள் கிடைக்கும். மஞ்சள், பச்சை, சிவப்பு, கருப்பு என பல வண்ணங்கள். ஒரே பொருளை ஒவ்வொரு கண்ணாடி அணிந்து பார்ப்பது ஒரு ஆனந்தம் ! அந்த சிறு வயது விளையாட்டினுள் ஒளிந்திருக்கும் பெரிய உண்மையை இபோது தான் உணர முடிகிறது.
யாரையும், எந்த பொருளையும் நம் எந்த கலர் கண்ணாடி அணிந்து பார்கிறோம் என்பதை பொறுத்தே அவர்களை பற்றி நம் மனம் ஒரு முடிவுக்கு வருகிறது. நியாமாக பார்த்தால் நிறம்அற்ற கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் நம்மில் பலரால் அது முடிவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால்ஏதோ ஒரு கலர் வந்து விடுகிறது. அது சரியோ, தவறோ தெரிய வில்லை.
ஆனால் காலம் நம்மை அத்தோடு விட்டு விடுவதில்லை. நமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குடுக்க படுகின்றன. அவற்றிலாவது நாம் நம் கலர் கண்ணாடியை அகற்ற வேண்டும். இல்லையெனில் உண்மையை பொய் என நம்பி ஏமாறலாம். நன்மையை தீமை என்று எண்ணி ஒதுங்கி விடலாம். வாழ்வின் நல்லதொரு வாய்ப்பை இழக்க நேரிடலாம். வாழ்வின் மோசமானதொரு வழியை தேர்ந்தெடுக்கலாம்.
என்னை சுற்றி இருக்கும் என் நண்பர்கள், உறவினர்கள் மீது எனக்கு அடிக்கடி கோபம் வருவதுண்டு, அப்போதெல்லாம் சற்றே நிதானபடுத்தி என் கலர் கண்ணடியை கழட்டி வைத்து விட்டு பார்க்க தொடங்கி உள்ளேன். அதன் மூலம் நான் கண்ட உண்மை இது தான், அவர்கள் எல்லோரும் நல்லவர்களே ! அவர்களை பற்றிய என்னுடைய புரிதலே தவறு. அனைவரும் என்னை போலவே இருக்க முடியாது, இருந்தால் அது மானுடம் அன்று. ஆனால் கலர் கண்ணாடியை கழற்றி பார்த்தாலும் சில பேர், சில விஷயங்கள் தவறாகவே இருக்கின்றன ! அவற்றை பற்றிய என்னுடைய புரிதல் சரியே.
எனவே நண்பர்களே, உங்களுக்கு ஒரு விஷயத்தின் மேலோ, ஒரு மனிதரின் மேலோ , கோபமோ, மாற்று கருத்தோ வந்தால், உடனே கலர் கண்ணாடி உங்கள் மனக்கண்ணில் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதை கழற்றி வைத்து விட்டு மீண்டும் பாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.
அன்புடன்,
பெருமாள்.
யாரையும், எந்த பொருளையும் நம் எந்த கலர் கண்ணாடி அணிந்து பார்கிறோம் என்பதை பொறுத்தே அவர்களை பற்றி நம் மனம் ஒரு முடிவுக்கு வருகிறது. நியாமாக பார்த்தால் நிறம்அற்ற கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் நம்மில் பலரால் அது முடிவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால்ஏதோ ஒரு கலர் வந்து விடுகிறது. அது சரியோ, தவறோ தெரிய வில்லை.
ஆனால் காலம் நம்மை அத்தோடு விட்டு விடுவதில்லை. நமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குடுக்க படுகின்றன. அவற்றிலாவது நாம் நம் கலர் கண்ணாடியை அகற்ற வேண்டும். இல்லையெனில் உண்மையை பொய் என நம்பி ஏமாறலாம். நன்மையை தீமை என்று எண்ணி ஒதுங்கி விடலாம். வாழ்வின் நல்லதொரு வாய்ப்பை இழக்க நேரிடலாம். வாழ்வின் மோசமானதொரு வழியை தேர்ந்தெடுக்கலாம்.
என்னை சுற்றி இருக்கும் என் நண்பர்கள், உறவினர்கள் மீது எனக்கு அடிக்கடி கோபம் வருவதுண்டு, அப்போதெல்லாம் சற்றே நிதானபடுத்தி என் கலர் கண்ணடியை கழட்டி வைத்து விட்டு பார்க்க தொடங்கி உள்ளேன். அதன் மூலம் நான் கண்ட உண்மை இது தான், அவர்கள் எல்லோரும் நல்லவர்களே ! அவர்களை பற்றிய என்னுடைய புரிதலே தவறு. அனைவரும் என்னை போலவே இருக்க முடியாது, இருந்தால் அது மானுடம் அன்று. ஆனால் கலர் கண்ணாடியை கழற்றி பார்த்தாலும் சில பேர், சில விஷயங்கள் தவறாகவே இருக்கின்றன ! அவற்றை பற்றிய என்னுடைய புரிதல் சரியே.
எனவே நண்பர்களே, உங்களுக்கு ஒரு விஷயத்தின் மேலோ, ஒரு மனிதரின் மேலோ , கோபமோ, மாற்று கருத்தோ வந்தால், உடனே கலர் கண்ணாடி உங்கள் மனக்கண்ணில் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதை கழற்றி வைத்து விட்டு மீண்டும் பாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.
அன்புடன்,
பெருமாள்.
Subscribe to:
Posts (Atom)