பாடல்:
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் காரக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, மன்னர் சேனை மானுமே.
பொருள்:
அயோத்தி மாநகர கோட்டை அகழியில் நீந்தும் அன்ன பறவைகள் (அரசனுடைய) வெண்கொற்றக் குடைகளாகவும்; முதலைகள் கிரகங்களெல்லாம் சுற்றிவரும் பெரிய மலைகளை போன்ற யானைப் படைகளாகவும்; வீசும் அலைகளில் அலைவுறும் தண்டுகளை கொண்ட தாமரை மலர்களே குதிரைப் படைகளாகவும்; அங்கு நீந்தித் திரிகின்ற மீன்களே வாளாகவும், வேலாகவும் தோற்றமளித்து, அந்த அகழியே மன்னனுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படையாகத் திகழ்ந்தது.
மீன்களை வேலுக்கும் வாளுக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கும் கம்பன் வித்தன் தானே !!!
அன்புடன்,
பெருமாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.