Sunday, March 28, 2010

சுசன் போயல் !

வெளி தோற்றத்தை கண்டு ஒருவரின் திறமையை மதிப்பிட கூடாது என்பதற்கு சுசன் போயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ! கீழ் கண்ட வீடியோ மேல் சொன்ன செய்திக்கு ஆதாரம் !

http://www.youtube.com/watch?v=RxPZh4AnWyk&feature=related

அன்புடன் ,
பெருமாள்

பெண் - நீ ஒரு மாய இன்பம் !

இறைவன் படைப்பில் மிகவும் அழகான விஷயம் பெண் ! மிகவும் ஆபத்தான விஷயம் பெண் ! மிகவும் குழப்பமான விஷயம் பெண் ! மிகவும் கஷ்டமான விஷயம் பெண் ! மிகவும் சுவாரஸ்யமான விஷயம் பெண் ! அதனால் தான் எல்லா ஆண்களும் ஒரு குறிப்பிட்ட வயது பருவத்தில் பெண்களிடம் விழுந்து விடுகிறோம். யாரும் இதில் தப்பியதில்லை.

அழகான பெண்களை பார்க்கும் போது, இவளுக்காக எதையும் பண்ணலாம் என்று தோணும். அதே பெண்களை வேறு சில சமயம் பார்க்கும் பொது, கருமம் இவளுக்காகவா அலைந்தோம் என்று தோணும். அதுவும் அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் சிரித்து பேசினால் இந்த வெறுப்பு சற்றே அதிகமாக இருக்கும். இது ஒரு மாய உலகம். இந்த வயதில் இப்படி தான் இருக்கும் போல... ஆனால் ஆண்டவனின் படைப்பின் விந்தை தான் இது. இது முழுதும் உடல் சார்ந்த விஷயம் அல்ல... அதே நேரம் முழுதும் மனம் சார்ந்த விஷயமும் அல்ல. சில சமயம் உடல் சொல்வதை மனம் கேட்பதில்லை , பல சமயங்களில் மனம் சொல்வதை உடல் கேட்பதில்லை. மிகவும் கடினமான விஷயம் இவற்றை தாண்டி வருவது !

யுவதிகளுக்கும் இதே மாயா இருக்கும் என்று நினைக்கிறேன் ! உடலும் மனமும் மானுடம் தானே ! இதில் ஆண் என்ன பெண் என்ன ! நான் மேல் சொன்ன விஷயங்களும் காதலும், காமமும் மிக நெருங்கிய தொடர்புடையவை ! காமம் இல்லாத காதல் இல்லை ! இவை இரண்டு பற்றி பேச நிறைய இருப்பதால் தனி பதிவாக இடுகிறேன் !

இன்பமான குழப்பத்துடன்,
பெருமாள்.

இது தான் ஜனநாயகம் !

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு செய்தி தொலைக்காட்சி குஜராத் கலவரங்கள் பற்றி விவாதம் நடத்தியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், நரேந்திர மோடி, மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. வழக்கம் போல பொத்தாம் பொதுவாக மோடி ஒரு கொலைகாரன் என்று வசை பாடி கொண்டே இருந்தனர் அந்த இரு காங்கிரஸ் தலைகள். ஆனால் மோடி கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பிறகு அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. மோடி கேட்ட கேள்வி இது தான். கலவரம் தொடங்கிய இரண்டாவது நாளே மோடி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, கூடுதல் போலீஸ் படை கேட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்கள் கேட்டும், ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அலுவலுகம் ஒரு பதிலையும் தர வில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் உயிரை பணயம் வைத்தவர்கள் மோடியை கொலைகாரன் என்று சொல்லிய அவலம் இது !

எவ்வளவோ செய்தும் எட்டு வருடங்களாக இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. மோடியும் தொடர்ந்து நடந்த எல்லா தேர்தல்களிலும் அசைக்க முடியாத வெற்றியை கண்டு விட்டார். இது தான் உண்மை வெற்றி. இன்று அதில் ஒரு படியாக இது வரை எந்த முதலமைச்சரும் செய்யாத, இனிமேலும் செய்ய தெம்பில்லாத ஒன்றை செய்து விட்டார். ஒன்பது மணி நேர முழு விசாரணைக்கு ஒரு முதலமைச்சர் சம்மன் அனுப்பிய இரண்டே நாட்களில் ஒத்துக்கொண்டு முடித்தும் கொடுத்திருக்கிறார். இது அவர் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் அல்ல... ஜனநாயகத்தின் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை.. நீதி துறை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இது தான் ஜனநாயகம் !

விரைவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று உச்ச நீதிமன்றம் சொல்லும். உண்மை வெல்லும !

அன்புடன்,
பெருமாள்