சில மாதங்களுக்கு முன்பு, ஒரு செய்தி தொலைக்காட்சி குஜராத் கலவரங்கள் பற்றி விவாதம் நடத்தியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், நரேந்திர மோடி, மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. வழக்கம் போல பொத்தாம் பொதுவாக மோடி ஒரு கொலைகாரன் என்று வசை பாடி கொண்டே இருந்தனர் அந்த இரு காங்கிரஸ் தலைகள். ஆனால் மோடி கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பிறகு அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. மோடி கேட்ட கேள்வி இது தான். கலவரம் தொடங்கிய இரண்டாவது நாளே மோடி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, கூடுதல் போலீஸ் படை கேட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்கள் கேட்டும், ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அலுவலுகம் ஒரு பதிலையும் தர வில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் உயிரை பணயம் வைத்தவர்கள் மோடியை கொலைகாரன் என்று சொல்லிய அவலம் இது !
எவ்வளவோ செய்தும் எட்டு வருடங்களாக இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. மோடியும் தொடர்ந்து நடந்த எல்லா தேர்தல்களிலும் அசைக்க முடியாத வெற்றியை கண்டு விட்டார். இது தான் உண்மை வெற்றி. இன்று அதில் ஒரு படியாக இது வரை எந்த முதலமைச்சரும் செய்யாத, இனிமேலும் செய்ய தெம்பில்லாத ஒன்றை செய்து விட்டார். ஒன்பது மணி நேர முழு விசாரணைக்கு ஒரு முதலமைச்சர் சம்மன் அனுப்பிய இரண்டே நாட்களில் ஒத்துக்கொண்டு முடித்தும் கொடுத்திருக்கிறார். இது அவர் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் அல்ல... ஜனநாயகத்தின் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை.. நீதி துறை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இது தான் ஜனநாயகம் !
விரைவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று உச்ச நீதிமன்றம் சொல்லும். உண்மை வெல்லும !
அன்புடன்,
பெருமாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.