கடந்த பத்து வருடங்களுக்குள் நம் நாட்டில் உருவெடுத்து வளர்ந்துள்ள மடங்கள், ஆசிரமங்களின் எண்ணிகையை பார்த்தால் மயக்கம் வருகிறது. எங்கிருந்து வந்தார்கள் இந்த நவ யுக சாமியார்கள் / சாமியரினிகள் ?? என்ன தான் வேண்டும் இவர்களுக்கு ???
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இவர்கள் என்ன புரோக்கர்களா ? இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே எந்த காலத்திலும் புரோக்கர்கள் தேவை இல்லை. ஆனால் இறைவன் பெயரால் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் இவர்கள். இவர்களில் எத்தனை பேர் எளிமையான வாழ்கை வாழ்கிறார்கள் ? எத்தனை பேர் தங்கள் பெயரில் "அறகட்டளை" வைத்து கல்வி, மருத்துவம் இவற்றில் காசு பார்க்காமல் இருக்கிறார்கள்? இதில் இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு. இருபது முப்பது கார்கள், காமெராக்கள் , மாலை , மரியாதை , மண்ணாங்கட்டி என எல்லா கருமம் வேறு ! தனி மனித வழிபாடு என்பது அறுத்தெறிய பட வேண்டிய களை.
எந்த மதமும் தனி மனித வழிபாடை முன்னிருதியதே கிடையாது. ஆனால் இறைவன் பெயரால் இந்த கூட்டம் மக்களை வர வைத்து , அவர்களையே வழிபட செய்து கொண்டிருகிறது. எங்கும் செயற்கை , எதிலும் செயற்கை.. என்று ஆகிவிட்ட நிலை , எனவே இறைவனை வழிபடவும் நம் மக்களுக்கு செயற்கைய ப்ரோகேர்கள் தேவை போல.. இந்த ப்ரோகேர்களை பாசமாக அம்மா, அப்பா , அய்யா என்று கூப்பிடுவதில் நம் மக்களுக்கு ஒரு செயற்கை ஆனந்தம் ! பதிலுக்கு அவர்களும் ஒரு செயற்கை புன்னகை ! எல்லாம் செயற்கை ஆகின பிறகு இவர்கள் காணும் இறை கூட செயற்கை தான் என்பதை உணர வேண்டும் நம் மக்கள். கொடுமையான விஷயம் என்ன வென்றால் இந்த "நவ யுக இறை ப்ரோகேர்கள் " வைக்கும் பொறி இல் சிக்குவது படித்த அறிவாளிகள் (முட்டாள்கள்) !!
ஒரு வழியாக நித்தியானந்த பிடிபட்டார்.. இன்னும் சில நாட்களில் எல்லாரும் பிடிபடுவர். அது வரை இவர்கள் அடிக்கும் கூத்தை சகித்து கொள்ளத்தான் வேண்டும். எளிமை இல் இறைவனை தேடாமல் , எங்கோ தேடும் செம்மறி ஆடு கூட்டமாகி போனது நம் மக்கள் கூட்டம்.
வருத்ததுடன்,
பெருமாள்.
Saturday, July 24, 2010
கம்பன் ஒரு வித்தன் - பாகம் 4
பாடல்:
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.
பொருள்:
மூச்சை பிடித்து பேரொலியுடன் ஊதப்படும் சங்கின் ஒலியும், பறைபோன்ற தோற்கருவிகளில் குச்சிகளை கொண்டு எழுப்பப்படும் ஒலியும், கைகளால் தட்டப்பட்டு வாசிக்கப்படும் தோற்கருவிகளின் ஒலியும், எல்லாமும், உழவர்கள் தங்களுடைய மாடுகளை நிலத்தில் (உழுவதற்காக) விரட்டி அதட்டும் ஓசையில் அடங்கிவிடுகின்றன.
மேல் சொன்ன அனைத்து இசை கருவிகளில் இருந்தும் உண்டாகும் ஒலி, அவ்வூரில் உள்ள உழவர்கள் தங்கள் மாடுகளை உழுதொழிலில் ஈடுபடுத்தும் பொது விரட்டி அதட்டும் சப்தத்தில் அடங்கி விடுகிறதாம் !! அவ்வூரில் உழவு தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கையை சிறப்பாக காட்ட கம்பன் கட்டும் வித்தை தான் இது !
அன்புடன்,
பெருமாள்.
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.
பொருள்:
மூச்சை பிடித்து பேரொலியுடன் ஊதப்படும் சங்கின் ஒலியும், பறைபோன்ற தோற்கருவிகளில் குச்சிகளை கொண்டு எழுப்பப்படும் ஒலியும், கைகளால் தட்டப்பட்டு வாசிக்கப்படும் தோற்கருவிகளின் ஒலியும், எல்லாமும், உழவர்கள் தங்களுடைய மாடுகளை நிலத்தில் (உழுவதற்காக) விரட்டி அதட்டும் ஓசையில் அடங்கிவிடுகின்றன.
மேல் சொன்ன அனைத்து இசை கருவிகளில் இருந்தும் உண்டாகும் ஒலி, அவ்வூரில் உள்ள உழவர்கள் தங்கள் மாடுகளை உழுதொழிலில் ஈடுபடுத்தும் பொது விரட்டி அதட்டும் சப்தத்தில் அடங்கி விடுகிறதாம் !! அவ்வூரில் உழவு தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கையை சிறப்பாக காட்ட கம்பன் கட்டும் வித்தை தான் இது !
அன்புடன்,
பெருமாள்.
Sunday, July 18, 2010
இது தான் பெண் உரிமையா?
சமீப காலங்களில் நான் அடிக்கடி பலரிடம் கேட்கும் சொல் "பெண் உரிமை" . அவர்களில் பலரின் பார்வையில் பெண் உரிமை என்பது "பெண்கள் அவர்களின் சமுதாய/குடும்ப கடமைகளை மறக்க கிடைக்கும் அனுமதி " என்பதாகும் . வருத்தத்திற்கு உரிய செய்தி இது.
சமுதாயமும், குடும்பமும் ஆண் , பெண் என்ற இரண்டு பெரிய பங்கு தாரர்களை உள்ளடக்கியது. இதில் இந்த இரு பிரிவினருக்கும் கடமைகளும், உரிமைகளும் உள்ளன. உங்கள் உரிமைகள் கடமைகளை மறக்கடிக்க விடுதல் ஆரோகியமான மாற்றம் அல்ல. உரிமைகளை கட்டுக்கோப்பின்றி அவிழ்த்து விட்ட எந்த சமுதாயமும் நல்ல வளர்ச்சியை கண்ட தில்லை.
பெண் உரிமை என்ற உடனே, அமெரிக்க சமுதாயத்தை மேற்கோள் கட்டும் பலரை நான் பார்க்கிறேன். அமெரிக்க பெண் உரிமை பாகுபாடு இல்லாதது. அவர்களின் பெண் உரிமை போராட்ட வரலாறு உன்னதமானது. ஜனநாயக வாழ்வின் அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட அமெரிக்க பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அடிப்படி உரிமைக்காக போராடியது அமெரிக்க பெண்கள் சமுதாயம். போராடி வெற்றியும் பெற்றது. அவர்கள் "இட ஒதுக்கீடு" கேட்க வில்லை. பெண்கள் சிறப்பு பேருந்து கேட்கவில்லை. அவர்களின் தன்னம்பிக்கை வணக்கத்திற்கு உரியது. இன்றும் அமெரிக்க குடும்பங்களில் சமையல் என்பது பெண்களின் ராஜ்ஜியமாகவே உள்ளது. தங்களின் அன்பானவர்களுக்கு சமைத்து குடுப்பதேன்பது அமெரிக்க தாய்மார்களின் பேரானந்தம். அவர்களுக்கும் வேலை பளு உண்டு. அதை காரணம் காட்டி அவர்கள் தங்களின் கடமையில் இருந்து தப்பித்து கொள்ள வில்லை. அவர்களின் கடமையை மனபூர்வமான மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.
சமையல் என்ன பெண்களின் சாபக்கேடா? என்று கேட்பது தான் இங்கு பெண் உரிமை. பெண்களுக்கு எங்கு சென்றாலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழங்குவது தான் இங்கு பெண் உரிமை. நமக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, அரை குறை ஆடை அணிவது தான் இங்கு பெண் உரிமை. ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்வது தான் பெண் உரிமை ( தம், தண்ணி உட்பட). இத்தனை நாட்கள் இவர்களின் பெண் உரிமை "போராட்டங்கள்" சாதித்தது மேல் தட்டு வர்க்கத்து பெண்களின் திமிரின் வெளிப்பாடுகளே. இன்னும் கீழ் நிலையம் உழழும் என் சகோதிரிகளின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. பெண் சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டும் பெண் உரிமை என்ற பெயரில் கொக்கரித்து கூத்தடித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. பெண் உரிமை என்ற பெயரில் ஆதாயம் தேடும் இந்த கையாலாகத கூட்டத்தை பார்த்து நான் வெக்க படுகிறேன்.
பெண்களே, உங்களுக்கு உரிமை தர ஆண் சமுதாயம் ஒன்றும் கடவுள் அல்ல. அடிப்படை மனித உரிமை யாருக்கு மறுக்க பட்டாலும் அது கொடுமையே. பெண் என்ற பெயரில் சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் நீங்கள் எதிர் பார்பது உங்களின் நொண்டி தனமே. அதிலும் உரிமை என்ற பெயரில் உங்கள் கடமையை மறப்பது உங்களுக்கு அழகல்ல. இறைவனின் படைப்பில் மிக உன்னதமானவை ஆண்மை மற்றும் பெண்மை. இந்த இரண்டிலும் மேன்மையானது பெண்மையே ! அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனால் அந்த மேன்மையான குணத்தை உங்களில் நிறுத்திக்கொள்ள உங்களை உரியவர்கள் ஆக்கி கொள்வது உங்கள் கடமை. அதை மறந்தால், பெண்மைக்கு உரிய மேன்மை உங்களை விட்டு செல்லும், அதனுடன் பெண்மையால் உங்களுக்கு கிடைத்த மரியாதையும் தான் !
எனது தாழ்மையான வேண்டுகோள் இது தான்... பெண் உரிமை என்ற பெயரில் உங்களின் கடமையை மறந்து, மேன்மையான பெண்மை குணத்தை இழந்து , உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.
"நீங்கள் யாரிடம் அதிகம் மரியாதை வைத்திருக்கிறீர்களோ , அவர்கள் தவறு செய்தால் உங்களுக்கு கோபம் இரண்டு மடங்கு வரும்" . இதே நிலை தான் எனக்கு இந்த விஷயத்தில். பெண்மை என் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வீற்றிகும் உன்னதமான ஒரு விஷயம். அதை பெண்களே உதாசீனப்படுத்தும் போது என் கோபம் பல மடங்கு ஆகிறது.
வருத்ததுடன்,
பெருமாள்.
சமுதாயமும், குடும்பமும் ஆண் , பெண் என்ற இரண்டு பெரிய பங்கு தாரர்களை உள்ளடக்கியது. இதில் இந்த இரு பிரிவினருக்கும் கடமைகளும், உரிமைகளும் உள்ளன. உங்கள் உரிமைகள் கடமைகளை மறக்கடிக்க விடுதல் ஆரோகியமான மாற்றம் அல்ல. உரிமைகளை கட்டுக்கோப்பின்றி அவிழ்த்து விட்ட எந்த சமுதாயமும் நல்ல வளர்ச்சியை கண்ட தில்லை.
பெண் உரிமை என்ற உடனே, அமெரிக்க சமுதாயத்தை மேற்கோள் கட்டும் பலரை நான் பார்க்கிறேன். அமெரிக்க பெண் உரிமை பாகுபாடு இல்லாதது. அவர்களின் பெண் உரிமை போராட்ட வரலாறு உன்னதமானது. ஜனநாயக வாழ்வின் அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட அமெரிக்க பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அடிப்படி உரிமைக்காக போராடியது அமெரிக்க பெண்கள் சமுதாயம். போராடி வெற்றியும் பெற்றது. அவர்கள் "இட ஒதுக்கீடு" கேட்க வில்லை. பெண்கள் சிறப்பு பேருந்து கேட்கவில்லை. அவர்களின் தன்னம்பிக்கை வணக்கத்திற்கு உரியது. இன்றும் அமெரிக்க குடும்பங்களில் சமையல் என்பது பெண்களின் ராஜ்ஜியமாகவே உள்ளது. தங்களின் அன்பானவர்களுக்கு சமைத்து குடுப்பதேன்பது அமெரிக்க தாய்மார்களின் பேரானந்தம். அவர்களுக்கும் வேலை பளு உண்டு. அதை காரணம் காட்டி அவர்கள் தங்களின் கடமையில் இருந்து தப்பித்து கொள்ள வில்லை. அவர்களின் கடமையை மனபூர்வமான மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.
சமையல் என்ன பெண்களின் சாபக்கேடா? என்று கேட்பது தான் இங்கு பெண் உரிமை. பெண்களுக்கு எங்கு சென்றாலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழங்குவது தான் இங்கு பெண் உரிமை. நமக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, அரை குறை ஆடை அணிவது தான் இங்கு பெண் உரிமை. ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்வது தான் பெண் உரிமை ( தம், தண்ணி உட்பட). இத்தனை நாட்கள் இவர்களின் பெண் உரிமை "போராட்டங்கள்" சாதித்தது மேல் தட்டு வர்க்கத்து பெண்களின் திமிரின் வெளிப்பாடுகளே. இன்னும் கீழ் நிலையம் உழழும் என் சகோதிரிகளின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. பெண் சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டும் பெண் உரிமை என்ற பெயரில் கொக்கரித்து கூத்தடித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. பெண் உரிமை என்ற பெயரில் ஆதாயம் தேடும் இந்த கையாலாகத கூட்டத்தை பார்த்து நான் வெக்க படுகிறேன்.
பெண்களே, உங்களுக்கு உரிமை தர ஆண் சமுதாயம் ஒன்றும் கடவுள் அல்ல. அடிப்படை மனித உரிமை யாருக்கு மறுக்க பட்டாலும் அது கொடுமையே. பெண் என்ற பெயரில் சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் நீங்கள் எதிர் பார்பது உங்களின் நொண்டி தனமே. அதிலும் உரிமை என்ற பெயரில் உங்கள் கடமையை மறப்பது உங்களுக்கு அழகல்ல. இறைவனின் படைப்பில் மிக உன்னதமானவை ஆண்மை மற்றும் பெண்மை. இந்த இரண்டிலும் மேன்மையானது பெண்மையே ! அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனால் அந்த மேன்மையான குணத்தை உங்களில் நிறுத்திக்கொள்ள உங்களை உரியவர்கள் ஆக்கி கொள்வது உங்கள் கடமை. அதை மறந்தால், பெண்மைக்கு உரிய மேன்மை உங்களை விட்டு செல்லும், அதனுடன் பெண்மையால் உங்களுக்கு கிடைத்த மரியாதையும் தான் !
எனது தாழ்மையான வேண்டுகோள் இது தான்... பெண் உரிமை என்ற பெயரில் உங்களின் கடமையை மறந்து, மேன்மையான பெண்மை குணத்தை இழந்து , உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.
"நீங்கள் யாரிடம் அதிகம் மரியாதை வைத்திருக்கிறீர்களோ , அவர்கள் தவறு செய்தால் உங்களுக்கு கோபம் இரண்டு மடங்கு வரும்" . இதே நிலை தான் எனக்கு இந்த விஷயத்தில். பெண்மை என் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வீற்றிகும் உன்னதமான ஒரு விஷயம். அதை பெண்களே உதாசீனப்படுத்தும் போது என் கோபம் பல மடங்கு ஆகிறது.
வருத்ததுடன்,
பெருமாள்.
Monday, July 12, 2010
உங்கள் உதவி நாடி !
இட்லி வடையில் வந்த செய்தி இது.
நம்பதகுந்தது என்பதால் இங்கும் இடுகிறேன். உங்கள் உதவி போற்ற தக்கது.
வங்கி கணக்கு:
67063085622 - State Bank of Travancore (மதுரை மெயின்)- S. Petchiprema.
உங்களின் சிறிய உதவி, இம்மாணவிக்கு வெளிச்சம் தரும் .
நன்றி.
அன்புடன்,
பெருமாள்.
நம்பதகுந்தது என்பதால் இங்கும் இடுகிறேன். உங்கள் உதவி போற்ற தக்கது.
வங்கி கணக்கு:
67063085622 - State Bank of Travancore (மதுரை மெயின்)- S. Petchiprema.
உங்களின் சிறிய உதவி, இம்மாணவிக்கு வெளிச்சம் தரும் .
நன்றி.
அன்புடன்,
பெருமாள்.
Subscribe to:
Posts (Atom)