Saturday, July 24, 2010

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 4

பாடல்:
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.


பொருள்:
மூச்சை பிடித்து பேரொலியுடன் ஊதப்படும் சங்கின் ஒலியும், பறைபோன்ற தோற்கருவிகளில் குச்சிகளை கொண்டு எழுப்பப்படும் ஒலியும், கைகளால் தட்டப்பட்டு வாசிக்கப்படும் தோற்கருவிகளின் ஒலியும், எல்லாமும், உழவர்கள் தங்களுடைய மாடுகளை நிலத்தில் (உழுவதற்காக) விரட்டி அதட்டும் ஓசையில் அடங்கிவிடுகின்றன.
மேல் சொன்ன அனைத்து இசை கருவிகளில் இருந்தும் உண்டாகும் ஒலி, அவ்வூரில் உள்ள உழவர்கள் தங்கள் மாடுகளை உழுதொழிலில் ஈடுபடுத்தும் பொது விரட்டி அதட்டும் சப்தத்தில் அடங்கி விடுகிறதாம் !! அவ்வூரில் உழவு தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கையை சிறப்பாக காட்ட கம்பன் கட்டும் வித்தை தான் இது !

அன்புடன்,
பெருமாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.