கடந்த பத்து வருடங்களுக்குள் நம் நாட்டில் உருவெடுத்து வளர்ந்துள்ள மடங்கள், ஆசிரமங்களின் எண்ணிகையை பார்த்தால் மயக்கம் வருகிறது. எங்கிருந்து வந்தார்கள் இந்த நவ யுக சாமியார்கள் / சாமியரினிகள் ?? என்ன தான் வேண்டும் இவர்களுக்கு ???
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இவர்கள் என்ன புரோக்கர்களா ? இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே எந்த காலத்திலும் புரோக்கர்கள் தேவை இல்லை. ஆனால் இறைவன் பெயரால் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் இவர்கள். இவர்களில் எத்தனை பேர் எளிமையான வாழ்கை வாழ்கிறார்கள் ? எத்தனை பேர் தங்கள் பெயரில் "அறகட்டளை" வைத்து கல்வி, மருத்துவம் இவற்றில் காசு பார்க்காமல் இருக்கிறார்கள்? இதில் இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு. இருபது முப்பது கார்கள், காமெராக்கள் , மாலை , மரியாதை , மண்ணாங்கட்டி என எல்லா கருமம் வேறு ! தனி மனித வழிபாடு என்பது அறுத்தெறிய பட வேண்டிய களை.
எந்த மதமும் தனி மனித வழிபாடை முன்னிருதியதே கிடையாது. ஆனால் இறைவன் பெயரால் இந்த கூட்டம் மக்களை வர வைத்து , அவர்களையே வழிபட செய்து கொண்டிருகிறது. எங்கும் செயற்கை , எதிலும் செயற்கை.. என்று ஆகிவிட்ட நிலை , எனவே இறைவனை வழிபடவும் நம் மக்களுக்கு செயற்கைய ப்ரோகேர்கள் தேவை போல.. இந்த ப்ரோகேர்களை பாசமாக அம்மா, அப்பா , அய்யா என்று கூப்பிடுவதில் நம் மக்களுக்கு ஒரு செயற்கை ஆனந்தம் ! பதிலுக்கு அவர்களும் ஒரு செயற்கை புன்னகை ! எல்லாம் செயற்கை ஆகின பிறகு இவர்கள் காணும் இறை கூட செயற்கை தான் என்பதை உணர வேண்டும் நம் மக்கள். கொடுமையான விஷயம் என்ன வென்றால் இந்த "நவ யுக இறை ப்ரோகேர்கள் " வைக்கும் பொறி இல் சிக்குவது படித்த அறிவாளிகள் (முட்டாள்கள்) !!
ஒரு வழியாக நித்தியானந்த பிடிபட்டார்.. இன்னும் சில நாட்களில் எல்லாரும் பிடிபடுவர். அது வரை இவர்கள் அடிக்கும் கூத்தை சகித்து கொள்ளத்தான் வேண்டும். எளிமை இல் இறைவனை தேடாமல் , எங்கோ தேடும் செம்மறி ஆடு கூட்டமாகி போனது நம் மக்கள் கூட்டம்.
வருத்ததுடன்,
பெருமாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.