Sunday, June 20, 2010

ராவணன் - எனக்கு புரிந்தது

ரொம்ப நாளைக்கு பிறகு , நண்பனின் அன்பு தொல்லையால் ராவணன் படம் பார்க்க ஒத்து கொண்டேன். படம் பார்க்கும் முன்பு எனக்கு படத்தை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அது ஒரு வகையில் நல்லதே, இல்லை எனில் படம் பார்த்த பின் ஏமாற்றத்தின் அளவு இரு மடங்காக இருந்திருக்கும்.

படத்தில் திரை கதை என்று ஒன்று இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. போலீஸ் கற்பழித்து விடும் ஹீரோ (ராவணன்!!!) தங்கை... வழக்கம் போல் அண்ணனிடம் பொலம்பி விட்டு, தற்கொலை செய்து கொள்கிறாள். உடனே "வீரா"வேஷம் போட்டு பழிவாங்க புறப்படும் அண்ணன். பழிவாங்க போலீஸ் அதிகாரி உடைய பொண்டாடியை கடத்தி கொண்டு வந்து காதலிக்கிறார் ஹீரோ !!! ( என்னங்கட சாமி லாஜிக் இது !!!)

வழக்கம் போல போலீஸ் அதிகாரி பொண்டாடியை தேடி வர, நம்ம ஹீரோவை நல்லவராக காட்டுவதற்கு சில காட்சிகள். அப்புறம் ஏதோ சில பல டயலாக் பேசி ஹீரோ சென்று விட, அதிகாரி பொண்டாடியை கூடி கொண்டு "வீரா " வை பிடிக்க முடியாத வருத்ததுடன் செல்கிறார். அப்புறம் பயங்கரமா யோசிச்சு பொண்டாட்டிய கடுப்பேத்தி "வீரா" இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்து, அவரும் ஒரு பெரிய படையுடன் பின்னாடி வர, நம்ம "வீரா" அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு வெளிய வந்து அதிகாரி கிட்ட சிக்கி செத்துபோரன். இவ்ளோ தான் கதை.

எனக்கு இந்த படத்துல இருந்து புரிஞ்சது ரெண்டு விஷயம்,

  1. அடுத்தவன் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண, அந்த பொண்ண கடத்திட்டு வந்து ஒரு பத்து நாள் நல்ல சந்தோசமா வச்சுருந்தா போதும.
  2. ஆனா அப்டியே கரெக்ட் பண்ணினாலும், "மாற்றான் மனைவி மேல் ஆசை" பட்ட பாவத்துக்கு, அவளோட புருஷன் கையாலேயே செத்து போகணும்.

எனக்கு ரெண்டு விஷயமுமே பிடிச்சுருக்கு ! உங்களுக்கு???

அன்புடன்,

பெருமாள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.