Wednesday, June 2, 2010

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 2

இன்று என்னை கவர்ந்த பாடல் :-

பாடல்:
கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
மதுவளம் மலரில்கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்.

பொருள்:-
நல்ல வயலில் கதிர்விட்டு நிற்கும் இருக்கும் தானியங்களையும்; நறுமணம்
கொண்ட பொய்கைகளில் பூத்து நிற்கும் மலர்களையும்; மரங்களிலேயே முதிர்ந்து நிற்கும் பழங்களையும்; புன்செய் நிலத்தில் விளையும் பயறு வகைகளையும்; வீட்டில் கொல்லையில் உள்ள கொடிகளில் காய்த்த
காய்களையும்; நிலத்தில் குழிகளில் விளையும் கிழங்குகளையும், ஒவ்வொரு மலராகச் சென்று எடுத்துக் கொள்ளும் தேனீக்களைப் போல, மள்ளர்கள் ஆங்காங்கே சென்று சேகரித்து வருவர்

என்ன ஒரு அழகான விஷயங்கள். இவற்றை படிக்கும் பொழுதே , அவை ஒவ்வொன்றும் நம் கண் முன்னே வருகின்றன. இதை தவிர வேறென்ன வெற்றி ஒரு சிறந்த கவிதைக்கு இருக்க முடியும்.

அன்புடன்,
பெருமாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.