Sunday, May 9, 2010

நீயன்றி நானில்லை !

"எவள் இல்லையென்றால் நான் இந்த பூமிக்கு வந்திருக்க முடியாதோ,எவளை இழந்து விட்டால் என்னால் திரும்ப பெற முடியாதோ , அவளே என் தாயாவாள் " - கண்ணதாசன்.

இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளிடத்தும் காண முடிந்த பொதுவான ஒன்று தாய்மை. அது ஆடோ, மாடோ, குருவியோ , காக்காவோ, குரங்கோ, மனிதனோ யாராக இருந்தாலும் தாய்மையை காணாமல் இருந்திருக்க முடியாது. தாய்மையின் பெருமை பற்றி சொல்வது அவசியமற்றது. அத்தகைய உன்னதமான தாய்மை குணத்தை கொண்டுள்ள தாய்மார்களை போற்றும் இந்நாளில் என் அன்பான வாழ்த்துக்களை என் தாய்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். தாயே , உன் அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. உன் கையால் கிடைக்கும் வெறும் சோற்றின் சுவை வேறு எந்த உணவுக்கும் இல்லை. உன் அன்புக்கு நான் அடிமை. நீயன்றி நானில்லை !

இந்த புனிதமான நாளில், வருத்தத்திற்கு உரிய ஒரு செய்தியையும் சொல்ல வேண்டும். தாய்மை மகத்துவம் புரியாத இக்கால "நாகரீக" அம்மணிகள் சிலர் குழந்தை பராமரிப்பை சுமையாக கருதி வருவது வருத்தத்திற்கு உரிய செய்தி. உங்களுக்கு என் வேண்டுகோள் "தயவு செய்து குழந்தை பெற்று கொள்ளாதீர்கள்." உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது .

அன்புடன்,
பெருமாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.