Sunday, November 13, 2011

சித்திரப் பாவை - ஆழமான படைப்பு

சித்திரப் பாவை - 1968 இல் அகிலனால் படைக்க பெற்ற நாவல். மு. வ அவர்களின் அல்லி, வாடாமலர் போன்ற சமூக படைப்புகளுக்கு பிறகு என்னை மிகவும் பாதித்த படைப்பு இது.

சித்திரப் பாவை இல் இருந்து சில,

"அழகாக வாழ கற்றுக் கொள்; முடிந்தால் வாழ்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கபடுத்தமாலவது இரு"

"அன்பு உடலை பற்றியதாகவே இருந்தாலும் கூட அதையும் அழகாக சுவைக்க ஐந்து புலன்களைஅல்லவோ ஆண்டவன் மனிதருக்கு கொடுத்திருக்கிறான். தோட்டத்து அணில்களும் பறவைகளும் கன்று காலிகளான மிருகங்களும் கூட இயற்கையில் அவற்றின் காதலின்பத்தை ஒரு அருங்கலையாக அல்லவா கற்றிருகின்றன. உடல் வேட்கை மட்டும் அல்ல காதல்."

"கலை என்றால் மறைக்க வேண்டியதை மறைத்து வெளிபடுத்த  வேண்டியதை மட்டும் வெளிபடுத்த  வேண்டும். அப்போது தான் அதில் அழகு இருக்கும். வாழ்கை இல் விகாரம் இருந்தால் கூட, கலைஞன் அதை மெருகு படுத்தி குடுக்க வேண்டும். "

இன்றைய சமுதாயம் கண்டிப்பாக படிக்க வேண்டிய படைப்பு இது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிங்கள்.

அன்புடன்,
பெருமாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.