கடந்த பத்து வருடங்களில் நமது சமுதாயம் பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. குறிப்பிட தக்க மாற்றங்களில் ஒன்று பெண் சமுதாய மாற்றம். பெண்களுக்கு கல்வி, வேலை, பதவி என வரவேற்க தக்க மாற்றங்கள் உட்பட. இவைகளுடன் பெண்களின் நடை, உடை மற்றும் பாவனைகளும் வெகுவாக பலரிடம் மாறி உள்ளன. இவை சரி அல்லது தவறு என்று சொல்வதற்கில்லை. கல்வி, வேலை வந்தாலும் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறக்காத பெண்களை பார்க்கும் போது வரும் மரியாதையும், சந்தோசமும் ; அவற்றில் இருந்து மாறி விட்ட பெண்களை பார்க்கும் போது வருவதில்லை என்பது உண்மையே !
தினமும் டைடெல் பார்க்கில் மேலே சொன்ன இரண்டு விதமான பெண்களையும் பார்கிறேன். வெகு சிலரே மரியாதைக்கு உரியவர்கள் ஆகிறார்கள் என்பது வருத்தத்திற்கு உரிய செய்தியே ! ஆடை உடலை மறைக்க என்பது மாறி , ஆடை உடலை அரை குறையாக காட்ட என்று நினைக்க வைக்கும் நவ நாகரீக பெண்கள் அதிகமே ! அதிலும் சமீபமாக ஏதோ பத்து வயது சிறுமிக்கு தைத்தது போல உடலோடு ஒட்டி கொண்டது போல சுடிதார் அணிகிறார்கள். அதை பார்க்கும் போது நீச்சல் உடையை தான் ஞாபக படுத்துகிறது . அடித்து சொல்கிறேன் ... அப்படி அணிவது கண்டிப்பாக அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கவே இருக்காது... ஏதோ வைத்து இறுக்கமாக கட்டியது போலவே இருக்கும். பின்னே ஏன் இந்த மாதிரி உடைகள். ஒருவன் பார்க்க வேண்டிய உடலை உலகம் பார்க்க காட்டுவது தான் இவர்கள் நாகரீகம் என்றால் , அதை நான் காரி உமிழ்கிறேன்.
இந்த மாதிரி பெண்கள் மத்தியில் கூட, பார்பவர்கள் மதிக்க தக்க வகையில் ஆடை அணியும் பெண்களை நான் தலை வணங்குகிறேன். நீங்கள் வாழ்க !
அன்புடன்,
பெருமாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.