Tuesday, April 27, 2010

சிறந்த முன்னுதாரணம் !

நல்ல செய்தி ! நம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமாக பிளாஸ்டிக் ஒழிக்க பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்று முதல் அதை அமல் படுத்தி, இது வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. பிளாஸ்டிக் புழக்கத்தை கண்காணிக்க ஒரு குழு இருபத்தி நன்கு மணி நேரமும் செயல் பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்போருக்கு அந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்க படுகிறது. அந்த பைகளில் அச்சிடப்பட்டிருக்கும் வர்த்தக நிறுவனமும் தப்ப முடியாது, அவர்களுக்கு அபராத தொகை அதிகம் !

பொது மக்களுக்கு இது சற்றே தலை வலி என்றாலும், மக்கள் பிளாஸ்டிக் இல்லா நடை முறை வாழ்கைக்கு பழகி விட்டனர். எல்லா கடைகளிலும் இப்போது பேப்பர் அல்லது இலைகளே பேக் செய்ய பயன் படுத்துகின்றனர். குப்பை தொட்டிகளில் கூட பிளாஸ்டிக் பைகளை அவ்வளவாக காண முடிவதில்லை.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பாராட்டுக்கு உரியதே ! பெயர் அளவுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு என்று சொல்லி நின்று விடாமல், மக்களை பிளாஸ்டிக் புழக்கம் இல்லா வாழ்க்கைமுறைக்கு மெதுவாக கொண்டு செல்லும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! வெற்றி பெற வேண்டும்.

பல விஷயங்களில் முன்னோடி மாவட்டமாக விளங்கும் கன்னியாகுமரி, பிளாஸ்டிக் ஒழிப்பிலும் முன்னோடியாக விளங்கும் !

அன்புடன்,
பெருமாள்

1 comment:

Note: Only a member of this blog may post a comment.