Sunday, October 16, 2011

மானுடப்புரிதல்

மானுட வாழ்க்கை இன் முக்கிய ஆதாரம் புரிதல்; தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள புரிதல், கணவன் மனைவி இடையே ஆன புரிதல், நண்பர்களிட்யே புரிதல், அலுவலுகத்தில் உடன் வேலை செய்பவர்களியே புரிதல் ... என சொல்லி கொண்டே செல்லலாம்... இவற்றில் எதாவது ஒரு புரிதல் சரி இல்லை என்றால் ஒரு மனிதனுக்கு அந்த உறவு செழுமை பெறாது, பிரச்சனைகள் வளர ஆரம்பிக்கும், ஏமாற்றங்கள் பெருகும், நிம்மதி தொலையும். வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேளுங்கள்.. அவர்கள் வெற்றின் அடிப்படைகளில் ஒன்று புரிதலாக இருக்கும்... உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களை உங்களால்  நன்றாக புரிந்து கொள்ள முடிந்தால், உங்கள் வெற்றி அங்கு துவங்கி விடும். ஆனால் மனிதர்களை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல ! என்னென்றால் மனித மனம் ஒரு குரங்கு !!

மனிதர்களை புரிந்து கொள்வது ஓரிரு நாளில் நடந்து முடியும் விஷயம் அல்ல. அது முடிவில்லா அனுபவம்... இன்றும் கூட என் நெருங்கிய நண்பனை நான் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் அவனை பற்றிய ஒரு அடிப்படை புரிதல் எனக்கு இருக்கிறது... அந்த புரிதல் தான் எங்கள் உறவின் பலம்... அந்த அடிப்படை புரிதலை அடையவே கணிசமான காலம் தேவை பட்டது எங்களுக்கு.

நம்முடன் பழகும் ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு ஒரு கணிப்பு இருக்கும்... அந்த கணிப்பின் அடிப்படை இல் தான் நாம் அந்த நபருடன் பழக வேண்டிய நெருக்கத்தை முடிவு செய்கிறோம். அந்த கணிப்பு தான் நாளடைவில் புரிதலாக மாறுகிறது... அந்த கணிப்பு புரிதலாக மாறுவது அனுபவத்தின் அடிப்படை இல் ஆனது. இந்த நிகழ்வில் சில சமயம் நாம் ஏமாந்து போவதுண்டு.. அதை நாம் தவறான புரிதலில் உணர்கிறோம்.

சில சமயங்களில் நம் புரிதல் மேலேயே நமக்கு சந்தேகம் எழுவதுண்டு, அவை உண்மையாகவும் இருக்கலாம்.  அந்த சமயங்கள் மிகவும் தர்ம சங்கடமான காலங்கள், உண்மையான சோதனைகள். என் அனுபவத்தில் இருந்து நான் கற்று கொண்டது இது தான்.  உங்கள் புரிதலில் காலம் எழுப்பிய சந்தேகத்தை காலமே தீர்த்து வைக்க விட்டு விடுங்கள்... அந்த சந்தேகம் உங்களின் உன்னத உறவை உரசி பார்க்க விடாதீர்கள். பொறுமை தான் உங்களின் சக்தி..... அதை இழந்து விடாதீர்கள்.

அனேக சமயங்களில், நாம் நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, சக அலுவலர்களையோ நாம் எதிர்பார்க்கும் வகையில் நடந்து கொள்ள எதிர்பார்கிறோம். அவர்கள் அந்த எதிர்பார்ப்பை விட்டு விலகி சென்றால், அவர்களை பற்றிய நமது புரிதல் கேள்வி குறியாகிறது. அவர்கள் உங்களை காய படுத்தி விட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் ஏன் அவர்கள் நீங்கள் எதிர்பார்த்தது போல் நடக்க வில்லை என்பதை நீங்கள்  உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அது அவர்களை பற்றிய உங்களின் புரிதலை மேலும் பலபடுத்தும்.

எந்த உறவாக இருந்தாலும், முடிந்தவரை எதிர்பார்ப்பை குறைத்து கொள்ளுங்கள். அது ஏமாற்றங்களை குறைக்கும்.. உறவுகளை இழக்க வேண்டி இருக்காது.

அன்புடன்,
பெருமாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.