Sunday, December 20, 2009

முதல் பிரசவம் !

அன்புடையீர்,

இனிய வணக்கங்கள். நெடு நாளைய ஆசை ... கடந்த வாரம் ஒரு வழியாக ப்ளாக் உருவாக்கினேன் . இரு நிமிட வேலை தான்... ஆனால் இரண்டு மாதம் ஆனது எனக்கு. மீண்டும் ஒரு முறை என் சோம்பேறித்தனத்தை எண்ணி விரசப்பட்டேன்.

சமீப காலமாக சில சம்பவங்களை பார்க்கும் போது தோன்றும் கருத்துக்களை யாருடனாவது பகிர்ந்து கொள்ள தோன்றும்... கல்லூரி காலம் வரை நண்பர்கள் இருந்ததால் உடனே பகிர்ந்து கொள்ள முடிந்தது.. இப்போது அவனவன் வேறு வேறு ஊர்களில்.. வாரம் ஒருமுறை பேச மட்டுமே முடிகிறது.. இது தான் ப்ளாக் எழுத உந்துசக்தி !

ஒன்று சொல்லியே ஆக வேண்டும்... முதல் பிரசவம் ... மிகவும் கடினம் ... மறு பிழைப்பு. ( இந்த நான்கு வரிகளை எழுத அரை மணி நேரம் ஆனது எனக்கு.. இந்த அரை மணி நேரத்தில் ஒரு 4 அல்லது 5 முறை ப்ளாக் எழுதுவதை இன்றோடு விட்டு விடலாமா என்று நினைத்தேன் .... 4 அல்லது 5 முறை மறு பிழைப்பு ! )

விரைவில் சந்திப்போம் !
இனிய வார இறுதி அனைவருக்கும் .

அன்புடன்,
பெருமாள்

1 comment:

  1. Super da... now show who you are... happy to see you started blogging!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.