மிகவும் எதிர் பார்க்க பட்ட திரைப்படம் என்பதால், அவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைக்க வில்லை. சண்டே காலை எட்டு மணி ஷோ !! ரொம்ப கஷ்டம்... இருந்தாலும் சரியாக சென்று விட்டோம்.
காதல் - சரி.. தவறு என்பதை விட்டு பார்த்தால்... காதல் எல்லாருக்கும் மானா வாரியாக வரும் ஒரு நோய். ஒரே வித்தியாசம் எவ்வளவு சீரியஸ் ஆக எடுத்து கொள்கிறோம் என்பது தான். சரி, விண்ணை தாண்டி வருவோம்.. எளிதாக படத்தின் கதையை சொன்னால்.. ஜெஸ்ஸி க்காக பைத்தியமாய் அலையும் கார்த்திக்... குடும்ப பெண்ணாக ஜெஸ்ஸி. நன்றாக காதலித்து விட்டு , கடைசி இல் ஆப்பு வைத்து விட்டு, அமெரிக்கா சென்று ஒரு இளிச்சவாயனை திருமணம் செய்து கொள்கிறாள். (வழக்கமான நம்ம ஊரு காதல் முடிவே ) ஒரே நல்ல விஷயம், கார்த்திக் அவளை நினைத்து தாடி எல்லாம் வச்சுகாம ஒழுங்கா டைரக்டர் ஆகி ஜெஸ்ஸி பத்தி படமா டைரக்ட் பண்றார். அது என்னவோ ஜெஸ்ஸி வச்ச ஆப்பு .. ஆப்பு தான்.
ஒரு விஷயம்.. என்ன தான் காதல் பத்தி தெரிஞ்சாலும், நம்ம பசங்க யாரும் காதலிக்காம இருக்க போறதில்ல.. ஜெஸ்ஸி நல்ல பொண்ணு தான்.. இருபத்தி மூணு வருஷம் பாத்துகிட்ட அப்பா, அம்மா எல்லாத்தையும் ஒரே வருஷம் பழகின கார்த்திக் காக விட்டுட்டு வர முடியாது.... வர கூடாது... கார்த்திக் தான் லூசு பய..
ஆகவே மக்களே, உங்களுக்கு உள்ள கார்த்திக் இருந்தா அவன விரட்டி விட்டுருங்க... இல்லேன உங்களுக்கும் ஆப்பு தான்..
விண்ணை தாண்டி வருவாயா - வர மாட்டா மச்சி... வர மாட்டா !
அன்புடன்,
பெருமாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Dai, telegula climax different.
ReplyDeleteKarthi n Jessi will marry!
Ha ha ha... I like the tamil climax :-)
ReplyDeletehahaha ... last line semma punch !! :)
ReplyDelete